Wednesday, 23 May 2018

கல்லாலின் புடையமர்ந்து


கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
                ஆறங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
               பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுவாய் இருந்ததனை
               இருந்தபடி இருந்து காட்டியே
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
               நினைந்து பவத்தொடக்கை வெல்வோம்”

Tuesday, 22 May 2018

ஸ்ரீ ஹயக்ரீவர் மூலமந்திரம்


ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே

ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே!

ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே!
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்,
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

Friday, 18 May 2018

அபிராமி என்தன் விழித்துணையே



உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

பொருள்: உதிக்கின்ற செங்கதிரோனும் நெற்றியின் மையத்திலிடுகின்ற சிந்தூரத் திலகமும், ஞானம் கைவரப் பெற்றவர்களே மதிக்கின்ற மாணிக்கமும், மாதுளை மலரும், தாமரை மலரில் தோன்றிய இலக்குமி துதி செய்கின்ற மின்னற் கொடியும், மென்மணம் வீசும் குங்குமக் குழம்பும் ஆகிய அனைத்தையும் போன்றதென்று நூல்கள் யாவும் பாராட்டிக் கூறும் திருமேனியைக் கொண்ட அபிராமி அன்னையே எனக்கு மேலான துணையாவாள்.




தன்வந்த்ரயே நம:



ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாஸனாய த்ரைலோக்ய
நாதாய மஹாவிஷ்ணவே நம:


Sunday, 13 May 2018

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி



வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.



ஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே |



ஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே |

ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே ||