ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே!
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்,
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
No comments:
Post a Comment